கோவில்பட்டி அருகே மரத்தில் மோதி விபத்துக்குள்ளான கார். 
தற்போதைய செய்திகள்

கோவில்பட்டி அருகே மரத்தில் கார் மோதியதில் மூதாட்டி பலி

கோவில்பட்டி அருகே சனிக்கிழமை மரத்தில் கார் மோதியதில் மூதாட்டி பலியானர், ஒருவர் காயமடைந்தார்.

இணையதளச் செய்திப் பிரிவு

கோவில்பட்டி அருகே சனிக்கிழமை மரத்தில் கார் மோதியதில் மூதாட்டி பலியானர், ஒருவர் காயமடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள திருவேங்கடம் சத்திரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம் ஞானதுரை. இவர் அங்குள்ள தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக ‌ இருந்து வருகிறார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மதுரையில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் தனது மனைவி குணச்செல்வியுடன் பங்கேற்று விட்டு காரில் ஊருக்கு திரும்பியுள்ளார். காரை ஆபிரகாம் ஓட்டி வந்துள்ளார். கார் இளையரசனேந்தல் பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, கார் கட்டுப்பாட்டினை இழந்து சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோதியதில் குணச்செல்வி(63) சம்பவ இடத்திலேயே பலியானார். ஆபிரகாம் ஞானதுரை காயமடைந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் குணச்செல்வி உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், காயமடைந்த ஆபிரகாம் ஞானதுரையை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Elderly woman dies after car crashes into tree near Kovilpatti

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்! விரைவில் 2-வது திருமணம்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

SCROLL FOR NEXT