புதுச்சேரி: தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக, புதுச்சேரி, காரைக்காலில் வெள்ளிக்கிழமை(நவ.28) 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் டிட்வா புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் புதுச்சேரியை நோக்கி நகரும் என்றும் இதனால் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.