முகப்பு
தற்போதைய செய்திகள்

எச்-1பி விசா எதிரொலி: தொடர் சரிவில் பங்குச் சந்தை!

இன்றைய பங்குச் சந்தை நிலவரம் பற்றி...

Updated On : 23 செப்டம்பர் 2025, 12:10 pm IST
பங்குச் சந்தை நிலவரம் - IANS
பகிர்:

இந்த வாரத்தில் 2-ம் நாளாக இன்று(செவ்வாய்க்கிழமை) பங்குச்சந்தை சரிவில் வர்த்தகமாகி வருகிறது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
82,147.37 புள்ளிகளில் சரிவுடன் தொடங்கியது. நண்பகல் 12 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 283.83 புள்ளிகள் குறைந்து 81,876.14 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. முன்னதாக சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 89.20 புள்ளிகள் குறைந்து 25,113.15 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Advertisement

Advertisement

கடந்த வாரம் பங்குச் சந்தைகள் ஓரளவு ஏற்றத்தைச் சந்தித்த நிலையில், இந்த வாரம் தொடர்ந்து 2-ம் நாளாக இன்று சரிவில் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்காவில் எச்1பி விசா கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது பங்குச்சந்தையில் குறிப்பாக ஐடி பங்குகளில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இன்றும் ஐடி பங்குகள் அதிகம் விற்கப்பட்டு வருகின்றன. அதேபோல வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தொடர்ந்து தங்கள் பங்குகளை விற்று வருகின்றனர்.

இன்று மும்பை பங்குச்சந்தை மிட்-கேப் பங்குகள் 0.55%, ஸ்மால்-கேப் பங்குகள் 0.52% சரிந்தன.

மொத்தமாக 1,555 பங்குகள் ஏற்றத்திலும் 2,318 பங்குகள் சரிந்தும் வர்த்தகமாகி வருகின்றன. 207 பங்குகளின் விலையில் மாற்றமில்லை.

நிஃப்டியில் மாருதி (+2.09%), ஐஷர் மோட்டார்ஸ் (+1.67%), டாடா மோட்டார்ஸ் (+1.24%), எம்&எம் (+1.11%), பஜாஜ் ஃபைனான்ஸ் (+0.74%) ஆகியவை ஏற்றமடைந்தன.

அதேநேரத்தில் அல்ட்ராடெக் சிமென்ட் (-1.82%), ஏசியன் பெயிண்ட்ஸ் (-1.28%), டைட்டன் (-1.26%), சன் பார்மா (-0.94%), டிரென்ட் (-0.93%) அதிக இழப்பைச் சந்தித்த நிறுவனங்களாகும்.

வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 25 பைசா குறைந்து ரூ. 88.53 -ஆக இருந்தது.

summary

Sensex down 350 pts, Nifty below 25,100: US visa concerns among key factors behind market fall

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments