பாமக பேரவைக் குழு தலைவர் செளமியா அன்புமணி!
பாமகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி சட்டப்பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி இன்று (மே 11) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாமகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 18 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தமிழகத்தின் 17 வது சட்டப்பேரவை இன்று (மே 11) கூடியது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு, தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள சட்டப்பேரவைத் தலைவர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
Advertisement
Advertisement
அந்தவகையில் செளமியா அன்புமணி தருமபுரி எம்.எல்.ஏ.வாக இன்று பதவியேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, 3 எம்.எல்.ஏ.க்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
Sowmya Anbumani PMK General Council Chairperson
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.