பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணி
சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற பிறகு செளமியா அன்புமணி பேசியது குறித்து..
பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து தலைவர்களையும் பெருமைப்படுத்துவேன் என நம்புவதாக அக்கட்சியின் எம்.எல்.ஏ. செளமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 17 வது சட்டப்பேரவை இன்று (மே 11) கூடியது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு, தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள சட்டப்பேரவைத் தலைவர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தவெக, திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பேரவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றனர். பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 பேரும் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றனர்.
Advertisement
summary