பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணி
சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற பிறகு செளமியா அன்புமணி பேசியது குறித்து..
பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து தலைவர்களையும் பெருமைப்படுத்துவேன் என நம்புவதாக அக்கட்சியின் எம்.எல்.ஏ. செளமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 17 வது சட்டப்பேரவை இன்று (மே 11) கூடியது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு, தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள சட்டப்பேரவைத் தலைவர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அதிமுகவின் சி.வி. சண்முகம் தவிர எம்எல்ஏவாகத் தகுதி பெற்ற அனைத்து வேட்பாளர்களும் பேரவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றனர். பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 பேரும் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றனர்.
Advertisement
Advertisement
பதவியேற்புக்கு பிறகு செய்தியாளர்களுடன் செளமியா அன்புமணி பேசியதாவது:
''இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். தனது வாதங்களாலும் பேச்சுக்களாலும் வரலாற்றிம் இடம்பிடித்த எனது முன்னோர்களை நினைவுகூர்கிறேன். பாமக தலைவர்கள் அனைவரையும் பெருமைப்படுத்துவேன் என நம்புகிறேன்'' எனக் குறிப்பிட்டார்.
I hope to make all PMK leaders proud. PMK leader Sowmiya Anbumani
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.