செய்திகள்

நெகிழ்ச்சியான சம்பவம் இது! தாய்க்கு மகள் கொடுத்த அழகான பரிசு!

DIN

ஏர் இந்தியாவில், விமானப் பணிப் பெண்ணாக  பணி புரிந்தவர் பூஜா சின் சான்கர். ஒரு தாய் தான் நல்ல நிலையில் இருந்தால் அதேபோன்று, தன் மகளும் இருக்க வேண்டும் என விரும்புவார்.

அந்த வகையில், பூஜா சின் சான்கரின் மகள் அஷ்ரிதாவும்,  ஏர் இந்தியாவில்தான் பணிபுரிகிறார். ஆனால் விமானப் பணிப்பெண்ணாக அல்ல,  விமானியாக உள்ளார்.

இந்த நிலையில்,  பணி ஒய்வு பெறும் தாய்க்கு,  ஒரு நூதன ஆசை.  தன்  மகள் விமானம்  ஓட்ட,  தனது இறுதி நாள் வேலையை அதில் நிறைவு செய்ய வேண்டும் என்று.

இது பற்றி, ஏர் இந்தியாவிற்கு ஒரு கோரிக்கையாக, பூஜா வைத்தபோது, நிர்வாகம் அதனை பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டது. 

பூஜா கடைசி நாள் வேலையை  நிறைவு  செய்த விமானத்தை, அவருடைய  மகள் அஷ்ரிதாவே ஓட்டினார்.  பலன்... ஓய்வு பெற்ற தாயை வரவேற்க வேண்டிய மகள், தானே .. தாயை, ஓய்வுக்கு வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT