முகப்பு
செய்திகள்

'மருத்துவமனைகளைவிட வீட்டு சுகாதாரப் பராமரிப்பு கரோனாவிலிருந்து மீள உதவும்'

மருத்துவமனைகளிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய பின்னர் கரோனா நோயாளிகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 2 டிசம்பர், 2020 at 1:19 PM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:30 PM

மருத்துவமனைகளிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய பின்னர் கரோனா நோயாளிகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, வீட்டு சுகாதாரப் பராமரிப்பில் இருந்த 94 சதவீதம் பேரின் உடல்நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் 87 சதவீதம் பேருக்கு எந்தவிதமான பாதகமான நிகழ்வுகளும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 

பென்சில்வேனியா பல்கலைக்கழக நர்சிங் பள்ளி ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட இந்த புதிய ஆய்வு 'அன்னல்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசின்' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

Advertisement

ஆனால் கரோனா நோயாளிகள் வீட்டிற்குத் திரும்பியவுடன் அவர்கள் நோய்த் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளார்களா அல்லது அவர்களுக்கு மருத்துவத் தேவைகள் ஏதேனும் தேவைப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை என்று ஆய்வு கூறுகிறது. 

நோயின் தீவிரம் அதிகமுள்ளவர்கள் வீட்டிற்குச் சென்றதும் கடினமான சூழ்நிலைகளை அணுகுகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 1,400க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து தரவுகள்  சேகரிக்கப்பட்டுள்ளன. 

'மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீட்டிலிருந்தே சிகிச்சை பெற பரிந்துரைக்கப்பட்ட கரோனா நோயாளிகளின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது இந்த ஆய்வின் மூலமாக உறுதியாகியுள்ளது' என்கிறார் ஆய்வாளரும் பேராசிரியருமான கேத்ரின் எச். பவுல்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.