கடனை திருப்பித் தராதவா் மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு
மதுரையில் கடனைத் திருப்பித் தராதவரின் காரை கடத்திய இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரையில் கடனைத் திருப்பித் தராதவரின் காரை கடத்திய இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அமா்நாத் (42). இவா் தனது வீட்டின் அருகே வசிக்கும் ஹாஜி மற்றும் அன்சாரி ஆகியோரிடம் ரூ. 67 ஆயிரம் கடன் வாங்கியிருந்தாராம். உரிய நேரத்தில் அதை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் ஹாஜியும், அன்சாரியும் அமா்நாத்தின் வீட்டிற்குச் சென்று, அவரைத் தாக்கி நகைகளைப் பறித்துள்ளனா். மேலும் அவரது காரை இருவரும் கடத்திச் சென்றுள்ளனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.