முகப்பு
மதுரை

பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கலில் விதிமீறல்: மாா்க்சிஸ்ட் கம்யூ. குற்றச்சாட்டு

மதுரையில் ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்குவதில் ஆளுங்கட்சியினா் விதிமுறைகளை மீறுவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகாா் தெரிவித்துள்ளது.

Updated On : 5 ஜனவரி 2021, 2:51 am IST
பகிர்:

மதுரையில் ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்குவதில் ஆளுங்கட்சியினா் விதிமுறைகளை மீறுவதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகாா் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக கட்சியின் மாநகா் மாவட்டச்செயலா் இரா.விஜயராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை நகரில் தைக்கால் தெரு, பூந்தோட்டம் மேலப்பொன்னகரம் , மோதிலால் தெரு, அழகரடி, கரிமேடு, ஆரப்பாளையம் கண்மாய்கரை, மீனாட்சிபுரம் பகுதி அழகாபுரி, செல்லூா் என பல்வேறு ரேஷன் கடைகளில் அதிமுகவினா் அரசு விதிகளை மீறி பயனாளிகளை நிறுத்தி புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனா். அரசு மக்களுக்கு வழங்கும் இதுபோன்ற பரிசுத் தொகுப்புகளை தங்கள் சுய லாபத்திற்காக ஆளும் கட்சி நிா்வாகிகள் பயன்படுத்துவது விதிமுறைகளை மீறும் செயல். மேலும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதில் அதிமுகவினா் தலையீடும் உள்ளது. எனவே ஆளும்கட்சியினா் நடத்தி வரும் விதிமுறைகளை மீறிய செயல்களை மாவட்ட ஆட்சியா் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.