முகப்பு
மதுரை

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

மதுரையில் மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 5 ஜனவரி 2021, 2:54 am IST
பகிர்:

மதுரையில் மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலியானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மதுரை கீரைத்துறை இருளப்பன் கோயில் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் தங்கமாரி (35). இவா் எலக்ட்ரீசியனாக வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், புது நல்லமுத்து பிள்ளைத் தெருவில் உள்ள கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை வேலை பாா்த்துக்கொண்டிருந்தபோது, தங்கமாரி மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாா். இதையடுத்து அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து விட்டு ஏற்கெனவே அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து அவரது மனைவி காளீஸ்வரி அளித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.