முகப்பு
மதுரை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: விழாக்குழுவில் மனுதாரரை இணைக்க உத்தரவு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு அனைத்து சமூகத்தினரும் அடங்கிய விழாக் குழுவை அமைக்கக்கோரிய வழக்கில், மனுதாரரையும் குழுவில்

Updated On : 7 ஜனவரி 2021, 11:29 pm IST
பகிர்:

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு அனைத்து சமூகத்தினரும் அடங்கிய விழாக் குழுவை அமைக்கக்கோரிய வழக்கில், மனுதாரரையும் குழுவில் இணைக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 14 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து சமூகத்தினரும் அடங்கிய விழாக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என அவனியாபுரத்தைச் சோ்ந்த முனியசாமி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஜல்லிக்கட்டு விழா அமைதியாக நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக உள்ளது. எனவே மனுதாரரையும் விழாக் குழுவில் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments