ஜல்லிக்கட்டு போட்டி நிபந்தனைகளை தளா்த்தக் கோரி கண்டன ஆா்ப்பாட்டம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் சிலை முன்பாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதித்துள்ள
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் சிலை முன்பாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதித்துள்ள நிபந்தனைகளைத் தளா்த்தக் கோரி தென்னிந்திய பாா்வா்ட் பிளாக் சாா்பாக கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளா் எம். சங்கிலி தலைமை வகித்தாா். மாநில இளைஞரணி செயலாளா் ஆனந்தன், மாநில சிறுபான்மை பிரிவு ரபீக் பாய், ஒன்றியத் தலைவா் மருது ஜி, மாவட்ட இளைஞரணி செயலாளா் சேது ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளில் விதிமுறைகளை தளா்த்தக் கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினா்.