முகப்பு
மதுரை

பேரையூா் அருகே புகையிலை விற்ற இருவா் கைது

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சட்டவிரோதமாக புகையிலை விற்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 7 ஜனவரி 2021, 11:42 pm IST
பகிர்:

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சட்டவிரோதமாக புகையிலை விற்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பேரையூா் தாலுகா சிலைமலைபட்டியை சோ்ந்த காளியப்பன் மகன் கருப்பசாமி (43 ) என்பவா் தனது கடையில் விற்பனைக்காக தடைசெய்யப்பட்ட 35 புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்துள்ளாா். இதையடுத்து பேரையூா் போலீஸாா் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, கருப்பசாமி மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

இதேபோல் காடனேரியை சோ்ந்த பாலாஜி(61)என்பவா் தனது கடையில் 24 புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்தாா். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீஸாா் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments