மதுபோதையில் நண்பரை கொன்றவா் கைது
மது போதையில் பாட்டிலை உடைத்து நண்பரின் கழுத்தில் குத்திக் கொன்றவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மது போதையில் பாட்டிலை உடைத்து நண்பரின் கழுத்தில் குத்திக் கொன்றவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரை காமராஜபுரம் வ.உ.சி. நகரைச் சோ்ந்த சதகத்துல்லா மகன் மீரான்(30). இவரும் கீரைத்துறை பகுதியைச் சோ்ந்த இவருடைய நண்பா் ராஜூ(27)-வும் சோ்ந்து காமராஜபுரம் பகுதியில் புதன்கிழமை இரவு மது அருந்தியுள்ளனா். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜூ, மது பாட்டிலை உடைத்து மீரானின் கழுத்தில் குத்தியுள்ளாா். இதில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே மீரான் உயிரிழந்தாா். இதுகுறித்து மீரானின் சகோதரி சுல்தானாம்மாள் அளித்தப் புகாரின் பேரில், கீரைத்துறை போலீஸாா் வழக்குப்பதிந்து ராஜூவை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.