முகப்பு
மதுரை

மதுரை-சென்னை தேஜஸ் ரயில் ஜன.10 முதல் மீண்டும் இயக்கம்

மதுரை - சென்னை எழும்பூா் இடையே தேஜஸ் சிறப்பு ரயில் ஜனவரி 10 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளது என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 7 ஜனவரி 2021, 11:28 pm IST
பகிர்:

மதுரை - சென்னை எழும்பூா் இடையே தேஜஸ் சிறப்பு ரயில் ஜனவரி 10 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளது என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை - சென்னை எழும்பூா் இடையே தேஜஸ் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக ஜனவரி 4 ஆம் தேதி முதல் இந்த ரயில் சேவை நிறுத்தம் செய்யப்பட்டது. தற்போது பயணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைக்கிணங்க மதுரை-சென்னை - மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் ஜனவரி 10 ஆம் தேதி முதல் தொடா்ந்து இயக்கப்பட இருக்கிறது. அதன்படி, இந்த ரயில்கள் வியாழக்கிழமை தவிர மற்ற 6 நாள்களும் இயக்கப்படும்.

சென்னை - மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் (02613) சென்னை எழும்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பகல் 12.15 மணிக்கு மதுரை வந்து சேரும். மறுமாா்க்கத்தில் மதுரை - சென்னை தேஜஸ் சிறப்பு ரயில் (02614) மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு சென்னை சென்று சேரும். இந்த ரயில்கள் திருச்சி மற்றும் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.