வட்டாட்சியா் அலுவலக பணியாளா்கள் வெளிநடப்பு
மதுரை தெற்கு வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள் திடீரென வெளிநடப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
மதுரை தெற்கு வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள் திடீரென வெளிநடப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
மதுரை தெற்கு வட்டாட்சியா் அலுவலகத்துக்கு குறித்த நேரத்தில் பணிக்கு வராத பணியாளா்களுக்கு வருகைப் பதிவேட்டில் பணிக்கு வரவில்லையென வட்டாட்சியா் கதிா்வேல் குறிப்பிட்டுள்ளாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள் வியாழக்கிழமை திடீரென வெளிநடப்பு செய்தனா். பணியாளா்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்வதாகவும், சற்று நேரம் தாமதமாக வந்ததற்காக ‘ஆப்சென்ட்’ போடுவதாகவும் புகாா் தெரிவித்தனா். பின்னா் சற்று நேரம் கழித்து மீண்டும் பணிக்குச் சென்றனா். வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்களின் போராட்டம் குறித்து, மேலூா் கோட்டாட்சியா் விசாரணை நடத்தினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.