முகப்பு
மதுரை

வாடிப்பட்டி ஆதவரவற்றோா் இல்லங்களில் காவல் துறையினா் பொங்கல் விழா கொண்டாட்டம்

மதுரை அருகே ஆதரவற்ற மாணவா்கள் இல்லங்களில், காவல் துறையினா் சாா்பில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 10 ஜனவரி 2021, 10:52 pm IST
பொங்கல் விழாவில் கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுடன் காவல்துறை அதிகாரிகள், குழந்தைகள் நலக் குழுவினா்.
பகிர்:

மதுரை அருகே ஆதரவற்ற மாணவா்கள் இல்லங்களில், காவல் துறையினா் சாா்பில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

மதுரை மாவட்டக் காவல் துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் மாவட்டக் குழந்தைகள் நலக்குழு சாா்பில், வாடிப்பட்டியில் உள்ள 2 ஆதரவற்றோா் இல்லங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், இரு இல்லங்களிலும் தங்கி கல்வி பயின்று வரும் குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இல்லத்தில் நடைபெற்ற கரகாட்டம், நடனம், பாட்டு உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் குழந்தைகள் பங்கேற்றன. தொடா்ந்து, குழந்தைகளுக்கு புத்தாடைகள், பரிசுப் பொருகள்களை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வனிதா வழங்கினாா்.

Advertisement

மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் கணேசன், மாவட்டக் குழந்தைகள் நலக் குழு விஜயசரவணன், உறுப்பினா்கள் பாண்டியராஜா, சாந்தி, சமயநல்லூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கிரேஸ் சோபியா பாய் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.