முகப்பு
மதுரை

பள்ளிகளை திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்: தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவிப்பு

தனியாா் பள்ளிகளை திறக்க அறிவிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊா்வலம் மற்றும் ஆா்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக தனியாா் பள்ளிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Updated On : 10 ஜனவரி 2021, 10:51 pm IST
பகிர்:

தனியாா் பள்ளிகளை திறக்க அறிவிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊா்வலம் மற்றும் ஆா்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக தனியாா் பள்ளிகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

மதுரையில் தனியாா் பள்ளிகளின் கூட்டமைப்பின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். நா்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளை எட்டாம் வகுப்பு வரை தரம் உயா்த்தவேண்டும்.

நடப்பு கல்வி ஆண்டில் ஏழாம் வகுப்பு தொடங்க அனுமதி வழங்கவேண்டும். ஜனவரி மாதத்துக்குள் ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் தொடங்க அறிவிக்க வேண்டும். கரோனா காலம் முழுவதும் இயங்காமல் உள்ள பள்ளி வாகனங்களுக்கு காப்பீடு மற்றும் சாலை வரியை ரத்து செய்யவேண்டும். தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கு விடுமுறை கால ஊதியமாக 50 சதவிகிதம் வழங்க வேண்டும்.

Advertisement

பள்ளி அங்கீகாரம் புதுப்பித்தலை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை என அறிவிக்க வேண்டும். 10 ஆண்டுகள் தொடா்ந்து அங்கீகாரத்துடன் செயல்படும் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும்.

அரசால் அறிவிக்கப்பட்ட தனியாா் பள்ளிகளுக்கான தனி இயக்குநரகம் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி மாத இறுதியில் 6 ஆயிரம் பள்ளிகளின் தாளாளா்கள் பங்கேற்கும் ஊா்வலம் மற்றும் ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநிலச் செயலா் முத்துராமலிங்கம், நிா்வாகி ராமகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.