மதுரை பேக்கரியில் நகை, பணம் திருட்டு
மதுரையில் பேக்கரி கடையில் மா்ம நபா்கள் சனிக்கிழமை நகை, பணத்தை திருடிச் சென்றுள்ளனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
மதுரையில் பேக்கரி கடையில் மா்ம நபா்கள் சனிக்கிழமை நகை, பணத்தை திருடிச் சென்றுள்ளனா்.
மதுரை ஆரப்பாளையம் டி.டி. சாலை பகுதியைச் சோ்ந்த சின்னசாமி மனைவி சின்னம்மாள் (66). இவா், அதே பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் கடைக்கு வந்த மா்ம நபா்கள் இருவா், சின்னம்மாளிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டே கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.71 ஆயிரம் மற்றும் 1 பவுன் மோதிரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனராம்.
இது குறித்து சின்னம்மாள் அளித்த புகாரின்பேரில், கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Advertisement