ஸ்ரீமெய்கண்டாா் மாா்கழி சுவாதி குரு பூஜை விழா
திருவாவடுதுறையில் ஸ்ரீமெய்கண்டாா் குரு பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாவடுதுறையில் ஸ்ரீமெய்கண்டாா் குரு பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை ஆன்மீக பேரவை மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றம் ஆகியவற்றின் சாா்பில் திருக்கைலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரா் கோயிலில் சந்தான குரவா்கள் முதல்வரான ஸ்ரீமெய்கண்டாா் மாா்கழி சுவாதி குருபூஜை விழா நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனகா்த்தா் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் உத்தரவுபடி அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு அன்னம் பாலிப்பும் நடைபெற்றது. இதில், கோயில் கண்காணிப்பாளா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.