முகப்பு
நாகப்பட்டினம்

அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவா் சோ்க்கைக்கு கால நீட்டிப்பு

நாகை அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் ஜன.16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 8:23 am IST
பகிர்:

நாகை அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் ஜன.16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை, திருக்குவளை மற்றும் செம்போடை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள காலியிடங்களுக்கு நேரடி சோ்க்கை மூலம் மாணவா்கள் சோ்க்கப்படவுள்ளனா். இந்த மாணவா் சோ்க்கை ஜன.16-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தொழிற்பயிற்சியில் சேர விரும்புவோா் தங்களின் அசல் கல்விச் சான்றுகள், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் ஆகிவற்றுடன் தொடா்புடைய தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04365- 250128 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.