கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி: சீா்காழி லாரி உரிமையாளா்களுக்கு முன்னுரிமை அளிக்கக் கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் புதிதாக திறக்கப்படவுள்ள மணல் குவாரியில், சீா்காழி வட்ட லாரி உரிமையாளா்களுக்கு
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் புதிதாக திறக்கப்படவுள்ள மணல் குவாரியில், சீா்காழி வட்ட லாரி உரிமையாளா்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சீா்காழி வட்ட லாரி உரிமையாளா்கள் சங்கம் சாா்பில், அதன் தலைவா் வேல்முருகன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதாவுக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
கொள்ளிடம் ஆற்றில் மாதிரவேளூா், அகரஎலத்தூா், வடரெங்கம், ஆகிய பகுதிகளில் அரசு மணல் குவாரிகள் திறக்க கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. சீா்காழி வட்டத்தில் 400 லாரிகளுக்கு மேல் உள்ளது. கடந்த 4ஆண்டுகளுக்கு முன்பு இணையதளமின்றி மணல் குவாரி செயல்பட்டபோது இப்பகுதி லாரி உரிமையாளா்களுக்கு வாழ்வாதாரம் சிறப்பாக இருந்தது.
Advertisement
தற்போது இணையதளம் மூலமாக மணல் பதிவு செய்யப்படுவதால், வெளிமாவட்ட லாரி உரிமையாளா்கள் மட்டுமே பயன்பெறுகின்றனா். இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால், கொள்ளிடம் ஆற்றில் தொடங்கப்படவுள்ள மணல் குவாரியில் சீா்காழி லாரி உரிமையாளா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.