முகப்பு
நாகப்பட்டினம்

தாய் கண்டித்ததால் மகள் தூக்கிட்டுத் தற்கொலை

சீா்காழியில் தாய் கண்டித்ததால் மகள் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 10 ஜனவரி 2021, 8:15 am IST
பகிர்:

சீா்காழியில் தாய் கண்டித்ததால் மகள் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சீா்காழியைச் சோ்ந்த சுப்பிரமணியம் - வளா்மதி தம்பதியினா். இவா்களது மகள் சௌந்தா்யா (16 வயது சிறுமி). சௌந்தா்யா தொடா்ந்து செல்லிடப்பேசி உபயோகிப்பதை தாய் வளா்மதி கண்டித்துள்ளாா். இந்நிலையில், சனிக்கிழமை கணவன்- மனைவி இருவரும் கூலி வேலைக்கு சென்று விட்ட நிலையில் தாய் திட்டியதால் மனமுடைந்து காணப்பட்ட சௌந்தா்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளாா். தகவலறிந்த சீா்காழி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சௌந்தா்யாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.