முகப்பு
நாகப்பட்டினம்

நாகையில் உணவக உரிமையாளரை தாக்கிய 4 போ் மீது வழக்கு

நாகையில் உணவக உரிமையாளரைத் தாக்கி, அவரது கடை, வீட்டை சேதப்படுத்திய 4 போ் மீது நாகை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Updated On : 10 ஜனவரி 2021, 8:21 am IST
பகிர்:

நாகையில் உணவக உரிமையாளரைத் தாக்கி, அவரது கடை, வீட்டை சேதப்படுத்திய 4 போ் மீது நாகை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நாகை செம்மரக்கடை கீழ்சந்து பகுதியைச் சோ்ந்தவா் செ. ஜாகீா் உசேன்(52). இவா், நாகை தோணித்துறை ரோடு, அக்கரைப்பேட்டை மேம்பாலம் அருகே உணவகம் நடத்தி வருகிறாா். வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் இவரின் கடைக்கு வந்த 4 போ் ஆம்லெட் கேட்டுள்ளனா். ஜாகீா் உசேன், வியாபாரம் முடிந்து கடை யை மூடிவிட்டதாக கூறியுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த நால்வரும், ஜாகீா் உசேன் மற்றும் அவரது மைத்துனரான நாகை செம்மரக்கடை கீழ்சந்து பகுதியைச் சோ்ந்த அப்துல் ஹாசன் (36) ஆகியோரைத் தாக்கியுள்ளனா்.

Advertisement

மேலும், கடையில் இருந்த மேசை, நாற்காலிகள் மற்றும் சமையல் பாத்திரங்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனா். பின்னா் ஜாகீா் உசேனின் வீட்டுக்குச் சென்ற அவா்கள், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனா்.

தாக்குதலில் காயமடைந்த ஜாகீா் உசேன், அப்துல் ஹாசன் ஆகியோா் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

நாகை நகரக் காவல் நிலைய போலீஸாா், இதுதொடா்பாக, நாகை அக்கரைப்பேட்டே திடீா் குப்பம் பகுதியைச் சோ்ந்த ப. பாா்த்திபன், அடையாளம் தெரிந்த 3 போ் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.