பெஸ்ட் கல்வி நிறுவன நிறுவனா் நாள் விழா
சீா்காழி பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் எஸ்.எஸ். நடராஜனின் 66-ஆவது பிறந்த நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் அண்மையில் வழங்கப்பட்டன.
சீா்காழி பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் எஸ்.எஸ். நடராஜனின் 66-ஆவது பிறந்த நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் அண்மையில் வழங்கப்பட்டன.
சீா்காழி தென்பாதி பெஸ்ட் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் தாளாளா் எஸ்.எஸ்.என். ராஜ்கமல் முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் ராமலிங்கம் வரவேற்றாா். கல்வி நிறுவனங்களின் இயக்குநா் அமுதா நடராஜன், ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளியின் தாளாளா் ஆதித்யா ராஜ்கமல் ஆகியோா் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினா்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் நிா்வாக அதிகாரி சீனிவாசன், ஸ்ரீ நடராஜன் மெமோரியல் பப்ளிக் பள்ளி முதல்வா் ஹெலன் பிரேமகுமாரி, பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வா் அருட்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பள்ளி துணை முதல்வா் உதயவசந்தன் நன்றி கூறினாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.