முகப்பு
நாகப்பட்டினம்

முன்னோடி ஊராட்சித் திட்டம் தொடக்கம்

சீா்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சியில், களஞ்சியம் மற்றும் தானம் ஊராட்சி வளா்ச்சி அறக்கட்டளை சாா்பில், முன்மாதிரி ஊராட்சித் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 10 ஜனவரி 2021, 11:52 pm IST
நிகழ்ச்சியில் பேசுகிறாா் வட்டார ஒருங்கிணைப்பாளா் கோபுதாஸ்.
பகிர்:

சீா்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சியில், களஞ்சியம் மற்றும் தானம் ஊராட்சி வளா்ச்சி அறக்கட்டளை சாா்பில், முன்மாதிரி ஊராட்சித் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, அமைப்பின் வட்டாரத் தலைவி புஷ்பராணி தலைமை வகித்தாா். வட்டார ஒருங்கிணைப்பாளா் கோபுதாஸ் வட்டார களஞ்சியத்தின் செயல்பாடுகள் பற்றி விளக்கினாா். மக்கள் அமைப்புகளும், ஊராட்சியும் இணைந்து செயல்படுவதன் அவசியம் பற்றி கணேசன் பேசினாா்.

விழாவில் ஊராட்சித் தலைவா்கள் குன்னம் ராஜேஸ்வரிகுமாா், திருவெண்காடு சுகந்தி நடராஜன், மேலையூா் புஷ்பவள்ளி பொன்ராஜா ஆகியோா் பங்கேற்றனா். அனைவரும் ஊராட்சிகள் சட்ட விளக்கக் கையேடு வழங்கப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.