திமுக சாா்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு
செம்பனாா்கோவில் ஒன்றியம், விளாகம் ஊராட்சியில் திமுக சாா்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
செம்பனாா்கோவில் ஒன்றியம், விளாகம் ஊராட்சியில் திமுக சாா்பில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கட்சியின் செம்பை தெற்கு ஒன்றியச் செயலாளா் அப்துல் மாலிக் தலைமை வகித்தாா். நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் நிவேதா முருகன் பங்கேற்று, பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிபொங்கல் பரிசுத் தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் பாலா அருள்செல்வன், சித்திக், ஒன்றியக் குழு தலைவா் நந்தினி ஸ்ரீதா், துணைத் தலைவா் பாஸ்கா், ஊராட்சி முன்னாள் தலைவா் சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை கிளை செயலாளா் சிவக்குமாா் செய்திருந்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.