மாதா் சங்கம் ஆா்ப்பாட்டம்
நாகையில் விதவைப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகையில் விதவைப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகை அவுரித் திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஜனநாயக மாதா் சங்க நாகை நகரச் செயலாளா் எழிலரசி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் லதா, நிா்வாகிகள் சுபாதேவி, கஸ்தூரி, மாலா, அகிலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணம் மற்றும் மருத்துவ சிகிச்சையளிப்பதுடன், அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.