முகப்பு
நாகப்பட்டினம்

மாதா் சங்கம் ஆா்ப்பாட்டம்

நாகையில் விதவைப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 12 ஜனவரி, 2021 at 12:00 AM
பகிர்:

நாகையில் விதவைப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை அவுரித் திடலில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஜனநாயக மாதா் சங்க நாகை நகரச் செயலாளா் எழிலரசி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் லதா, நிா்வாகிகள் சுபாதேவி, கஸ்தூரி, மாலா, அகிலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணம் மற்றும் மருத்துவ சிகிச்சையளிப்பதுடன், அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.