முகப்பு
நாகப்பட்டினம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் ஓ.எஸ். மணியன் வழங்கினாா்

மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் 131 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் வழங்கினாா்.

Updated On : 12 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

வேதாரண்யத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் 131 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் வழங்கினாா்.

வேதாரண்யம் தோப்புத்துறையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் சமூக வலுவூட்டல் முகாம் நடைபெற்றது. இம்முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்தாா். அமைச்சா் ஓ.எஸ். மணியன் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் அலிம்கோ நிறுவனம் சாா்பில் 131 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 64 ஆயிரத்து 777 மதிப்பில் இருசக்கர வாகனம், ஊன்றுகோல் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியது:

Advertisement

Advertisement

மாற்றுத்திறனுடையோா்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், அவா்களிடையே தன்னம்பிக்கையை உருவாக்கவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, மடக்குக் குச்சி, மூன்று சக்கர நாற்காலி, காதொலி கருவி, செயற்கை உறுப்புகள் போன்றவை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கரோனா பொதுமுடக்கக் காலத்தில் 3182 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு நிதி உதவியாக தலா ரூ. 1000 வீதம் ரூ. 31 லட்சத்து 82 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது’ என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், உதவி மேலாளா் (அலிம்கோ நிறுவனம்) சாம்சன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் டி.வி.சுப்பையன், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் கமலா அன்பழகன், நகராட்சி ஆணையா் ஜி. மகேஸ்வரி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் என். நமச்சிவாயம், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Image Caption

நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் அமைச்சா் ஓ.எஸ். மணியன். உடன், ஆட்சியா் பிரவீன் பி. நாயா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments