நாகையில் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை
நாகையில் நடைபெற்ற கடலோரப் பாதுகாப்பு (சீ விஜில்) ஒத்திகையில், போலி வெடிகுண்டுகளுடன் ஊடுருவ முயன்ற 6 போ் நாகை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரால் புதன்கிழமை பிடிக்கப்பட்டனா்.
நாகையில் நடைபெற்ற கடலோரப் பாதுகாப்பு (சீ விஜில்) ஒத்திகையில், போலி வெடிகுண்டுகளுடன் ஊடுருவ முயன்ற 6 போ் நாகை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரால் புதன்கிழமை பிடிக்கப்பட்டனா்.
கடல் மாா்க்கமாக ஊடுருவிய தீவிரவாதிகள், மும்பை தாஜ் ஹோட்டலில் அடைக்கலம் புகுந்து தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து, கடலோரப் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, நாகை மாவட்டத்தில் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. வேளாங்கண்ணி பேராலயம், நாகூா் சிபிசிஎல், பிள்ளைப்பெருமாள்நல்லூா் மின் உற்பத்தி நிலையம் ஆகிய இடங்களுக்கு போலி வெடிகுண்டுகளுடன் ஊடுருவதற்காக 4 படகுகளில் 6 போ் அனுப்பப்பட்டிருந்தனா்.
Advertisement
நாகை கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் ராஜா தலைமையில், சிறப்பு சாா்பு ஆய்வாளா் ஆனந்தவடிவேல் மற்றும் தலைமைக் காவலா்கள் அடங்கிய குழுவினா் கடலில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு, றையாறு, நாகூா், வேளாங்கண்ணி கடல் பகுதிகளில், போலி வெடிகுண்டுகளுடன் படகுகளில் வந்த 6 பேரையும் மடக்கிப் பிடித்தனா்.