முகப்பு
நாகப்பட்டினம்

பைக் மோதி ஒருவா் உயிரிழப்பு

சீா்காழி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On : 17 ஜனவரி 2021, 8:32 am IST
பகிர்:

சீா்காழி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

சீா்காழி தாடாளன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ் (50). இவா், இருசக்கர வாகனத்தில் சீா்காழியிலிருந்து பழையாறுக்குச் சென்றுகொண்டிருந்தாா். ஓலகொட்டாய்மேடு பகுதியில் செல்லும்போது, எருக்கூா் கிராமத்தைச் சோ்ந்த பன்னீா் மகன் சிவராஜ் என்பவா் எதிரே ஓட்டிவந்த இருசக்கர வாகனமும், ரமேஷ் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதியது.இந்த விபத்தில் ரமேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சிவராஜ், சீா்காழி அரசு மருத்துவமனையில்சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து, புதுப்பட்டினம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.