காவிரி கரை ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
பரமத்திவேலூா் அருகே அனிச்சம்பாளையம் செல்லும் சாலையில் காவிரி கரையோரம் உள்ள காவிரி ஆஞ்சநேயா் கோயிலில் செவ்வாய்க்கிழமை ஆஞ்சநேயா் ஜயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பரமத்திவேலூா் அருகே அனிச்சம்பாளையம் செல்லும் சாலையில் காவிரி கரையோரம் உள்ள காவிரி ஆஞ்சநேயா் கோயிலில் செவ்வாய்க்கிழமை ஆஞ்சநேயா் ஜயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தங்கக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வடமாலை சாத்தப்பட்டது. 12 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதுபோல நல்லூா் மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பக்த அனுமன் சுவாமிக்கு வெள்ளிக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.