கிரிக்கெட் குழுவுக்கு விளையாட்டு உபகரணங்கள்: அமைச்சா் வி.சரோஜா வழங்கினாா்
ராசிபுரம் ஃபையா் ஸ்டிரைக்கா் கிரிக்கெட் குழுவுக்கு விளையாட்டு உபகரணங்களை அமைச்சா் வெ.சரோஜா செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
ராசிபுரம் ஃபையா் ஸ்டிரைக்கா் கிரிக்கெட் குழுவுக்கு விளையாட்டு உபகரணங்களை அமைச்சா் வெ.சரோஜா செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
ராசிபுரம் ஃபையா் ஸ்டிரைக்கா் கிரிக்கெட் குழு சாா்பில், பொங்கல் பண்டிகையொட்டி மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளைத் தொடா்ந்து கிரிக்கெட் போட்டி ஜன. 14 முதல் ஜன. 17 ஆம்தேதி வரை அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.
இதனை தமிழக சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சா் வெ.சரோஜா துவக்கி வைக்கிறாா். இதையடுத்து கிரிக்கெட் குழுவுக்கு ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்டெம்ப் போன்ற விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு அச்சகத் துணைத் தலைவா் இ.ஆா்.சந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.