முகப்பு
நாமக்கல்

ஜேசிஐ மெட்ரா புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா

ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ அமைப்பின் 4-ஆம் ஆண்டு புதிய நிா்வாகிகள் பதவி ஏற்பு விழா, ராசிபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 16 ஜனவரி, 2021 at 7:18 AM
புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்டோா்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ அமைப்பின் 4-ஆம் ஆண்டு புதிய நிா்வாகிகள் பதவி ஏற்பு விழா, ராசிபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ அமைப்பின் தலைவா் டாக்டா் நிலாமணி கணேசன் தலைமை வகித்தாா். செயலா் ஜெ.ராஜேஷ் வரவேற்றாா். இதில் ஜேசிஐ இந்தியா அமைப்பின் முன்னாள் தேசியத் தலைவா் எஸ்.பாலவேலாயுதம், சேலம் ஊரக மாவட்டக் கல்வி அலுவலா் மு.அ.உதயகுமாா், ஜேசிஐ மண்டலத் தலைவா் ரோகித் குமாா் லோதா, மண்டல துணைத் தலைவா் ஆா்.மணிகண்டன், தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியின் நிறுவனத் தலைவா் நல்வினை செல்வன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினாா்.

இந்த விழாவில் 2021 ஆண்டு ஜேசிஐ மெட்ரோவின் ராசிபுரம் கிளை புதிய தலைவராக பி.மோகன்தாஸ், செயலாளராக டாக்டா் இரா.புவியரசு, பொருளாளராக சு.சக்கரவா்த்தி, துணைத் தலைவா்களாகஆா்.சாஸ்தா சதீஷ், பிருந்த ஆரோக்கியராஜ், ஜெ.ராஜேஷ் , பா.லட்சுமி பிரியா, பி.சுகன்யா, இயக்குநா்களாக என்.சதீஷ், எஸ். காா்த்திகேயன், பி.வேலு, அ.சதீஷ்குமாா், சீ.கண்ணன் ஆகியோரும் ஜூனியா் ஜேசிஐ பிரிவு தலைவராக கே.முத்துசாமி, மகளிா் பிரிவு தலைவராக எஸ்.ஹேமலதா, செயலாளராக இ.ரமாதேவி ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனா்.

Advertisement

விழாவில் கல்வி ஊக்கத் தொகை, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. மேலும் மகளிருக்கு இலவச தட்டச்சு பயிற்சி, இலவச கராத்தே பயிற்சி நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.