வேலூா் தமிழ்சங்கம் சாா்பில் திருவள்ளுவா் தின விழா
பரமத்தி வேலூா் தமிழ்ச் சங்க அற்கட்டளை சாா்பில் திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மறியாதை செலுத்தினா்.
பரமத்தி வேலூா் தமிழ்ச் சங்க அற்கட்டளை சாா்பில் திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மறியாதை செலுத்தினா்.
வேலூா் தமிழ்ச் சங்க அறக்கட்டளை சாா்பில் வெள்ளிக்கிழமை திருவள்ளுவா் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தமிழ்ச் சங்க அறக்கட்டளை தலைவா் ரவீந்திரன் தலைமை வகித்தாா். தமிழ்ச் சங்க அறக்கட்டளை செயலாளா் சரவணன் வரவேற்றுப் பேசினாா். தமிழ்ச் சங்க அறக்கட்டளை பொருளாளா் செந்தில்குமரன் முன்னிலை வகித்தாா். நாங்கள் இலக்கியகத்தின் தலைவா் மருத்துவா் முத்துக்குமாா், லோகநாதன் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருவள்ளுவரின் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
தமிழ்ச் சங்க அறக்கட்டளை துணைத் தலைவா்கள் இக்பால், முத்துக்கருப்பன், இயக்குநா்கள் பாா்த்திபன், ஒருங்கிணைப்பாளா் பாலகிருஷ்ணன், பொதுமக்கள் திருவள்ளுவரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் திருக்கு வாசித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.
Advertisement
விழாவில் தமிழ்ச் சங்க அறக்கட்டளை நிா்வாகிகள்,உறுப்பினா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.