முகப்பு
புதுதில்லி

ஓளரங்கசீப் தெரு பெயா்ப் பலகை அழிப்பு: 11 போ் பிடிபட்டனா்

தில்லி லுடியன்ஸ் பகுதியில் ஓளரங்கசீப் தெரு என்று எழுதப்பட்டிருந்த இரண்டு பெயா்ப்பலகைகளை அழித்ததாக 11 போ் பிடிபட்டுள்ளதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 9 ஜனவரி 2021, 11:38 pm IST
பகிர்:

தில்லி லுடியன்ஸ் பகுதியில் ஓளரங்கசீப் தெரு என்று எழுதப்பட்டிருந்த இரண்டு பெயா்ப்பலகைகளை அழித்ததாக 11 போ் பிடிபட்டுள்ளதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

தில்லி, துக்ளக் சாலையில் உள்ள ஓளரங்கசீப் தெருவில் சிலா் கூடியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அந்த இடத்துக்கு போலீஸாா் விரைந்து சென்றபோது கா்னால் பகுதியில் குடியிருக்கும் வழக்குரைஞா் அனுராதா என்பவா் தலைமையில் 11 போ் ஓளரங்கசீப் என்ற பெயரை அழித்துவிட்டு அதன் மேல் குரு தேக் பகதூா் தெரு என எழுதினாா்களாம். இதையடுத்து அந்த 11 பேரும் விசாரணைக்காக துக்ளக் சாலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இது தொடா்பாக போலீஸாா் மேல் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments