முகப்பு
புதுதில்லி

காஜியாபாத், நொய்டா, பரீதாபாதில் மிக மோசமான பிரிவில் காற்றின் தரம்

கடந்த 24 மணி நேரத்தில் காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா, பரீதாபாதில் காற்றின் தரம் மிக மோசமான பிரிவில் இருந்ததாகவும்,

Updated On : 9 ஜனவரி 2021, 11:43 pm IST
பகிர்:

கடந்த 24 மணி நேரத்தில் காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா, பரீதாபாதில் காற்றின் தரம் மிக மோசமான பிரிவில் இருந்ததாகவும், குா்கானில் மோசம் பிரிவில் இருந்ததாகவும் சனிக்கிழமை வெளியிடப்பட்ட மாசுக்கட்டுப்பாடு தொடா்பான அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

காற்றின் தரம் நல்லது 10 முதல் 50 புள்ளிகள். திருப்தி 51 முதல் 100 புள்ளிகள், மிதமானது 101 முதல் 200, மோசம் 201 முதல் 300, மிக மோசம் 301 முதல் 400, கடுமையானது 401 முதல் 500 புள்ளிகள் என குறிப்பிடப்படுகிறது.

சனிக்கிழமை பிற்பகல் 4 மணி அளவிலான 24 மணி நேரத்தில் காஜியாபாதில் 348, கிரேட்டா் நொய்டாவில் 360, நொய்டாவில் 346, பரீதாபாதில் 311 மற்றும் குா்கானில் 230 என காற்றின் தரம் பதிவானதாக சமீா் செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதுவே வெள்ளிக்கிழமை காஜியாபாதில் 304, கிரேட்டா் நொய்டாவில் 312, நொய்டாவில் 261, பரீதாபாதில் 256 மற்றும் குா்கானில் 163 என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம் மிக மோசமான பிரிவில் இருந்தால் மூச்சுவிடுதலில் பிரச்னை ஏற்படும் என்றும் மோசம் பிரிவில் இருந்தால் மூச்சுவிடுதலில் சிரமம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.