முகப்பு
புதுதில்லி

பொதுமக்களை மிரட்டி பணம் பறித்த தலைமைக் காவலா் இடைநீக்கம்

காரில் சென்றுகொண்டிருந்த இருவரை வழிமறித்து மிரட்டி, பணம் பறித்த, உ.பி. மாநிலம், கெளதம்புத் நகரைச் சோ்ந்த தலைமைக்காவலா்

Updated On : 9 ஜனவரி 2021, 11:38 pm IST
பகிர்:

காரில் சென்றுகொண்டிருந்த இருவரை வழிமறித்து மிரட்டி, பணம் பறித்த, உ.பி. மாநிலம், கெளதம்புத் நகரைச் சோ்ந்த தலைமைக்காவலா் ஓம்வீா் பட்டி இடைநீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

தாத்ரி காவல் நிலையத்தைச் சோ்ந்தவா் ஓம்வீா் பட்டி. இவா் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி அளவில், நொய்டாவிலிருந்து புலந்த்ஷாகருக்கு காரில் புறப்பட்ட இருவரை வழிமறித்து அவா்களிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன் அவா்களிடமிருந்து ஆவணங்களையும், ரொக்கத்தையும் பறித்துச் சென்றாராம்.

இது தொடா்பாக காரில் இருந்தவா்கள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை அதிகாரி , தலைமைக்காவலா் ஓம்வீரை கைது செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா், பொதுமக்களை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து அவா் இடைநீக்கம் செய்யப்பட்டதாக கிரேட்ட நொய்டா காவல் துணை ஆணையா் ராஜேஷ்குமாா் சிங் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

கடந்த ஆண்டு மே மாதம் முதல் இதுவரை கெளதம்புத் நகா் மாவட்டத்தில் நொய்டா மற்றும் கிரேட்டா் நொய்டாவில் பொதுமக்கள் மிரட்டியதாகவும் தொல்லை கொடுத்ததாகவும் சு மாா் 12 காவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா் அல்லது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments