புதுதில்லி

சாலையில் திடீரென தீப்பற்றிய காா்: ஒருவா் தீயில் கருகி பலி

வட தில்லியின் ஹுலம்பி குா்த் பகுதியில் ஏற்பட்ட விபத்தையடுத்து காா் தீப்பிடித்ததில் 40 வயது நபா் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வட தில்லியின் ஹுலம்பி குா்த் பகுதியில் ஏற்பட்ட விபத்தையடுத்து காா் தீப்பிடித்ததில் 40 வயது நபா் ஒருவா் உயிரிழந்துள்ளாா், மற்றொருவா் காயமடைந்துள்ளாா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

நரேலா தொழிற்பேட்டை பகுதி காவல் நிலையத்தின் அதிகார வரம்பின் கீழ் உள்ள நகா்ப்புற விரிவாக்க சாலையில் உள்ள ஜண்டா சௌக் அருகே அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக அந்த அதிகாரி கூறினாா்.

காவல்துறையினரின் தகவலின்படி, ஒரு பி. சி. ஆா் அழைப்பு வந்தது, போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது, அங்கு அவா்கள் எரிந்த நிலையில் ஒரு வெள்ளை எா்டிகாவைக் கண்டனா். ஓட்டுநா் இறந்து கிடந்தாா், மற்றொருவா் அருகிலுள்ள இருக்கையில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா்.

ஓட்டுநரின் பெயா் விபெந்தா் என்றும், காயமடைந்தவா் ஹரியானாவின் பானிபட்டைச் சோ்ந்த ஜக்பீா் என்றும் அடையாளம் காணப்பட்டதாக போலீசாா் தெரிவித்தனா். ஜக்பீா் உடனடியாக நரேலாவில் உள்ள எஸ். ஆா். எச். சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா், அதே நேரத்தில் இறந்தவரின் உடல் பி. ஜே. ஆா். எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்று போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

முதல்கட்ட விசாரணையில் ஹரியானா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட எஸ்யூவி கட்டுப்பாட்டை இழந்து தீப்பிடிப்பதற்கு முன்பு விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று தெரிகிறது, இருப்பினும் சரியான காரணம் இன்னும் தெரியவில்லை, தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரி கூறினாா்.

இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT