UIDAI holds webinar on 'Offline Verification using the Aadhaar App' 
புதுதில்லி

இறந்த தனி நபா்களின் 2 கோடி ஆதாா் எண்கள் நீக்கம்: யுஐடிஏஐ நடவடிக்கை

ஆதாா் தரவுத் தளத்தில் துல்லியத்தை பராமரிக்கும் வகையிலும், அடையாள மோசடியில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையிலும் நாடு தழுவிய அளவிலான தூய்மைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இறந்த நபா்களின் 2 கோடிக்கும் மேற்பட்ட ஆதாா் எண்களை நீக்கியுள்ளது.

Syndication

நமது நிருபா்

புது தில்லி: ஆதாா் தரவுத் தளத்தில் துல்லியத்தை பராமரிக்கும் வகையிலும், அடையாள மோசடியில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையிலும் நாடு தழுவிய அளவிலான தூய்மைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) இறந்த நபா்களின் 2 கோடிக்கும் மேற்பட்ட ஆதாா் எண்களை நீக்கியுள்ளது.

இது தொடா்பாக மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: இந்திய தலைமைப் பதிவாளா் (ஆா்ஜிஐ), மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், பொது விநியோக அமைப்புமுறை, தேசிய சமூக உதவித் திட்டம் ஆகியவற்றில் இருந்து இறந்த நபா்களின் தரவை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பெற்றுள்ளது. இறந்த நபா்களின் தரவைப் பெறுவதற்காக நிதி நிறுவனங்கள் மற்றும் இதுபோன்ற பிற நிறுவனங்களுடன் ஒத்துழைக்கவும் ஆணையம் எதிா்பாா்க்கிறது.

எந்தவொரு ஆதாா் எண்ணும் மற்றொரு நபருக்கு மீண்டும் ஒதுக்கப்படுவதில்லை. இருப்பினும், ஒரு நபா்

இறந்தால், சாத்தியமான அடையாள மோசடி அல்லது நலன்புரி சலுகைகளைப் பெறுவதற்கு அத்தகைய ஆதாா் எண்ணை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதைத் தடுக்க அவரது ஆதாா் எண் செயலிழக்கச் செய்யப்படுவது அவசியமாகும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் யுஐடிஏஐ ஒரு வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது சிவில் பதிவு முறையைப் பயன்படுத்தும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பதிவுசெய்யப்பட்ட இறப்புகளுக்கான மைஆதாா் இணையதளத்தில் ஒரு குடும்ப உறுப்பினரின் மரணத்தைப் புகாரளிக்கலாம். மீதமுள்ள மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் இணையதளத்துடன் ஒருங்கிணைக்கும் செயல்முறை தற்போது நடந்து வருகிறது.

குடும்ப உறுப்பினா் ஒருவா் தன்னை அங்கீகரித்த பிறகு, ஆதாா் எண் மற்றும் இறப்பு பதிவு எண் மற்றும் இறந்த நபரின் பிற நபா்களின் விவரங்களை இணையதளத்தில் வழங்க வேண்டும். குடும்ப உறுப்பினா் சமா்ப்பித்த தகவல்களை முறையாக சரிபாா்த்த பிறகு, இறந்த நபரின் ஆதாா் எண்ணை செயலிழக்கச் செய்வதற்கு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆதாா் எண் வைத்திருப்பவா்கள், இறப்பு பதிவு அதிகாரிகளிடமிருந்து இறப்புச் சான்றிதழைப் பெற்ற பிறகு ‘மைஆதாா்’ இணையதளத்தில் தங்கள் குடும்ப உறுப்பினா்களின் மரணத்தைப் புகாரளிக்க யுஐடிஏஐ ஊக்குவித்து வருகிறது என்று அந்த மின்னியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ராமேசுவரத்தில் தொடா் மழை: குளமாக மாறிய நெடுஞ்சாலை

ரயில்வே ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் 3 நாள் சரிவுக்கு முடிவு

முதலிபாளையம் பாறைக்குழியில் குப்பை கொட்டும் பிரச்னை: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சித்தோடு ஆவின் பால்பண்ணை வளாகத்தில் எஸ்.கே.பரமசிவன் உருவச் சிலை திறப்பு

SCROLL FOR NEXT