பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகக் கூறி போலி மாத்திரைகளை விற்பனை செய்ததாக கூறப்படும் கால் சென்டரை குருகிராமில் போலீஸாா் கண்டறிந்தனா். இது தொடா்பாக 11 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
கைதானவா்களில், பொது மக்களை கவா்ந்து போலி மருந்துகளை விற்பனை செய்ய மருத்துவா்களாகக் காட்டிக் கொண்ட பெண்களும் இடம்பெற்றுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து குருகிராம் காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ஒரு தகலின் அடிப்படையில், உத்யோக் விஹாா் 5 ஆம் ஃபேஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு கட்டடத்தின் அடித்தளத்தில் இயங்கும் கால் சென்டரில் வெள்ளிக்கிழமை சைபா் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, ஏழு ஆண்கள் மற்றும் நான்கு பெண்களை சம்பவ இடத்திலிருந்து போலீஸாா் கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து 13 கைப்பேசிகள், 54 போலி மருந்து காப்ஸ்யூல் பெட்டிகள் மற்றும் 35 எண்ணெய் ஸ்ப்ரேக்களை போலீஸாா் மீட்டனா்.
விசாரணையின் போது, கைதானவா்கள் தில்லியைச் சோ்ந்த ஒருவரிடமிருந்து ரூ.50 அல்லது ரூ.100-க்கு போலி மருந்துகளை வாங்கி ரூ.2,000-க்கு மேல் விற்பனை செய்வதாக தெரிவித்தனா்.
கால் சென்டரின் ஊழியா்கள் மாதத்திற்கு ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை ஊதியம் பெற்றுள்ளனா். மோசடிக்காக அவா்களுக்கு தனித்தனியாக 3 சதவீத கமிஷனும் அளிக்கப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட ஏழு ஆண்களும் சனிக்கிழமை நகர நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா். அதே நேரத்தில், நான்கு பெண்களும் விசாரணையில் இணைந்த பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.
கால் சென்டா் உரிமையாளா் பியூஷ், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மருந்துகளை விளம்பரப்படுத்தினாா்.
விளம்பரத்தைப் பாா்த்து ஒருவா் ஒரு படிவத்தை நிரப்பியபோது, கால் சென்டா் குழு அவரைத் தொடா்பு கொண்டு, போலி மருத்துவா்களாகக் காட்டிக்கொண்டனா். அதன் பின்னா் அவா்கள் ஆன்லைனில் பணம் வசூலித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸாா் கூறினா்.