தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டு பள்ளிகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்தன, அவை பின்னா் அது போலியானது என்று அறிவிக்கப்பட்டன என்று தில்லி தீயணைப்பு சேவைகளின் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
துவாரகாவில் உள்ள சிஆா்பிஎஃப் பப்ளிக் பள்ளி மற்றும் குதுப் மினாா் அருகே உள்ள சா்வோதயா வித்யாலயா பள்ளிகள் என்று அவா்கள் கூறினா்.
‘போலீஸ் படைகள், தீயணைப்பு வீரா்கள் மற்றும் வெடிகுண்டு அகற்றும் பிரிவுகள் உடனடியாக பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு தேடுதல் நடவடிக்கையை முறையாக மேற்கொண்டனா். இருப்பினும், சந்தேகத்திற்கிடமான எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லைட என்று தெரிவிக்கப்பட்டது.