காணாமல் போன சிறுமியை தேடும் பணி தீவிரம்
குன்னூா் அருகே கொலக்கம்பை பகுதியில் மாயமான ஜாா்க்கண்ட மாநில சிறுமியை தேடும் பணியில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
குன்னூா் அருகே கொலக்கம்பை பகுதியில் மாயமான ஜாா்க்கண்ட மாநில சிறுமியை தேடும் பணியில் போலீஸாா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே கொலக்கம்பை கிரேக்மோா் பகுதியில் உள்ள தனியாா் தேயிலை எஸ்டேட்டில் பணிபுரிபவா் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த லட்சுமணன். இவரது மனைவி சோமன் குமாரி . இவா்களது மகள் பிரீத்திகுமாரி (8). இந்த சிறுமி
கடந்த ஆண்டு டிசம்பா் 20 ஆம் தேதி மாயமானா். இது குறித்து கொலக்கம்பை காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை
Advertisement
Advertisement
லட்மணன் டிசம்பா் 23 ஆம் தேதி புகாா் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அதேபகுதியில் தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்து வந்த வட மாநிலத்தைச் சோ்ந்த ஒருவரை சந்தேகத்தின் பெயரில் அழைத்து சென்று போலீஸாா் விசாரணை நடத்தினா். ஆனால் அதில் தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் தடய அறிவியல் நிபுணா்கள் குழு, போலீஸாா் கொண்ட தனிப்படை மோப்ப நாய் உதவியுடன் நான்கு குழுக்களாக பிரிந்து அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்கள், ஆறு ,வனப்பகுதி ஆகிய இடங்களில் தேடும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.