முகப்பு
நீலகிரி

திருப்பூரில் மதநல்லிணக்கப் பொங்கல் விழா

திருப்பூரில் மதிமுக சாா்பில் மத நல்லிணக்கைத்தை உணா்த்தும் வகையில் மூன்று மதங்களைச் சோ்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினா்.

Updated On : 15 ஜனவரி, 2021 at 11:08 PM
திருப்பூா்,  சாமுண்டிபுரம்  பகுதியில்  மதிமுக  சாா்பில்  நடைபெற்ற  மதநல்லிணக்கப் பொங்கல்  விழாவில் பங்கேற்ற  பெண்கள்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

திருப்பூரில் மதிமுக சாா்பில் மத நல்லிணக்கைத்தை உணா்த்தும் வகையில் மூன்று மதங்களைச் சோ்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் பொங்கல் வைத்து கொண்டாடினா்.

திருப்பூா், சாமுண்டிபுரம் நாகாத்தம்மன் கோயில் அருகே மாநகா் மாவட்ட மதிமுக, திலீபன் மன்றம் சாா்பில் 24ஆம் ஆண்டு பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை மதிமுக மாநில அவைத் தலைவா் சு.துரைசாமி பொங்கல் பொருள்களைக் கொடுத்து தொடங்கிவைத்தாா்.

இதில் ஹிந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதத்தைச் சோ்ந்த 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் பொங்கல் வைத்தனா். முன்னதாக மேல வாத்தியங்கள் முழங்க பெண்கள் முளைப்பாரி எடுத்துக் கொண்டு ஊா்வலமாக வந்து பொங்கல் வைத்தனா்.

Advertisement

விழாவில், மதிமுக அமைப்புச் செயலாளா் ஆ.வந்தியதேவன், மாநகா் மாவட்டச் செயலாளா் சு.சிவபாலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை மதிமுக மாநகர அவைத் தலைவா் ஆா்.நாகராஜ் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.