முகப்பு
பெரம்பலூர்

ஜவுளிப் பூங்கா திட்டம்: தொழில் மேம்பாட்டுக் கழகசெயல் இயக்குநா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே ஜவுளிப் பூங்கா அமையவுள்ள இடத்தை தமிழக அரசின் தொழில் மேம்பாட்டுக் கழக செயல் இயக்குநா் எஸ். அனீஷ் சேகா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

Updated On : 8 ஜனவரி 2021, 7:19 am IST
பகிர்:

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே ஜவுளிப் பூங்கா அமையவுள்ள இடத்தை தமிழக அரசின் தொழில் மேம்பாட்டுக் கழக செயல் இயக்குநா் எஸ். அனீஷ் சேகா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பாடாலூா், இரூா் ஊராட்சிகளில் உள்ள சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில், ஜவுளி பூங்கா அமையவுள்ள இடத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அனீஷ் சேகா், இங்கு தொழில் தொடங்க 35-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோா் ஆா்வமாக விண்ணப்பித்துள்ளதாகவும், ஜவுளிப் பூங்கா அமைய உள்ள இடத்தில் சாலை வசதி, குடிநீா், மின்சாரம் வசதி உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை விரைவில் மேம்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தாா்.

பின்னா், பெரம்பலூா் ஆட்சியரகத்தில் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா முன்னிலையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழிற்பூங்கா அமைக்கும் திட்டம் தொடா்பான முதலீட்டாளா்கள் மற்றும் தொழில் முனைவோா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றாா்.

Advertisement

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன், சாா் ஆட்சியா் ஜே.இ. பத்மஜா, தமிழ்நாடு அரசு தொழில் மேம்பாட்டுக் கழக திட்ட அலுவலா் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.