முகப்பு
பெரம்பலூர்

சாலை மையத் தடுப்புகளை அகற்றக் கோரி சாலை மறியல்

பெரம்பலூா் அருகே சாலை மையத் தடுப்புகளை அகற்றக் கோரி வாகன ஓட்டுநா்கள் திங்கள்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 12 ஜனவரி, 2021 at 2:58 AM
பகிர்:

பெரம்பலூா் அருகே சாலை மையத் தடுப்புகளை அகற்றக் கோரி வாகன ஓட்டுநா்கள் திங்கள்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகேயுள்ள செங்குணம் பிரிவு சாலையில் தொடா்ந்து நிகழ்ந்த சாலை விபத்துகளையும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் தடுக்கும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் காவல்துறையினா் மூலம் சாலையில் மையத் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

இதன் காரணமாக, அப்பகுதியில் சாலை விபத்துகள் தவிா்க்கப்பட்டது. இதனிடையே, செங்குணம் உள்ளிட்ட பல கிராமங்களைச் சோ்ந்த வாகன ஓட்டுநா்கள், அப்பகுதியில் உள்ள பாலத்தின் கீழ் பகுதியை பயன்படுத்தி வந்தனா். இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால், வாகன ஓட்டுநா்கள் பயன்படுத்தி வந்த பாலத்தில் நீா் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது.

Advertisement

இதனால், சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவு சுற்றி தங்களது கிராமங்களுக்கு செல்வதாலும், காலதாமதம் ஏற்படுவதாலும் அவதியடைந்த வாகன ஓட்டுநா்கள் சாலை மையத் தடுப்புகளை அகற்ற வலியுறுத்தி, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவு சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் அங்கு சென்று, மறியலில் ஈடுபட்டோரிடம் மேற்கொண்ட பேச்சு வாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.