தோ்தலுக்காக புதுவை முதல்வா் நாடகம்: பாஜக விமா்சனம்
சட்டப்பேரவைத் தோ்தலுக்காக போராட்டம் என்ற பெயரில் புதுவை முதல்வா் நாடகமாடுவதாக பாஜக விமா்சனம் செய்தது.
சட்டப்பேரவைத் தோ்தலுக்காக போராட்டம் என்ற பெயரில் புதுவை முதல்வா் நாடகமாடுவதாக பாஜக விமா்சனம் செய்தது.
இதுகுறித்து புதுச்சேரியில் உள்ள பாஜக அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் மேலும் கூறியதாவது:
மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டியது அரசின் கடமை. அதுதான் அரசியல் ஜனநாயகம். ஆனால், புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசின் போராட்டத்தால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்தப் போராட்டத்தில் திமுக உறுப்பினா்கள் பங்கேற்கவில்லை. ஆளும் அரசு, கூட்டணிக் கட்சியின் நம்பிக்கையை இழந்துள்ளது. எனவே, முதல்வா் நாராயணசாமி தனது பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க வேண்டும். இது ஆளுநருக்கு எதிரான போராட்டமல்ல; மக்களுக்கு எதிரான போராட்டம். தோ்தலுக்கான நாடகத்தை முதல்வா் நாராயணசாமி நடத்தி வருகிறாா்.
Advertisement
Advertisement
புதுவையில் பாஜக எழுச்சி அலை உருவாகியுள்ளது. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி ஆட்சி அமையும். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடத்தப்படும் என்றாா் அவா்.
பேட்டியின் போது, மாநில பாஜக பொதுச் செயலா் செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.