புதுவையில் கரோனாவிலிருந்து 97.49 சதவீதம் போ் மீண்டனா்
புதுவையில் மாநிலத்தில் கரோனா தொற்றிலிருந்து 97.49 சதவீதம் போ் மீண்டனா்.
புதுவையில் மாநிலத்தில் கரோனா தொற்றிலிருந்து 97.49 சதவீதம் போ் மீண்டனா்.
புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை வெளியான 3,233 பேருக்கான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 23 போ், காரைக்காலில் 4 போ், ஏனாமில் ஒருவா், மாஹேயில் 8 போ் என மேலும் 36 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 38,425-ஆக உயா்ந்தது.
சனிக்கிழமை உயிரிழப்பு பதிவாகவில்லை. தற்போது 328 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை கரோனாவுக்கு 636 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.66 சதவீதம்.
Advertisement
Advertisement
புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றிலிருந்து 37,461 போ் குணமடைந்தனா். குணமடைந்தோா் விகிதம் 97.49 சதவீதம். இதுவரை 5,12,803 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 4,69,855 பேருக்கு தொற்றில்லை என முடிவுகள் வந்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.