முகப்பு
புதுச்சேரி

புதுவையில் இன்று முதல் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

புதுவையில் சனிக்கிழமை (ஜன.16) முதல் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படவுள்ளது.

Updated On : 15 ஜனவரி, 2021 at 11:13 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

புதுவையில் சனிக்கிழமை (ஜன.16) முதல் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படவுள்ளது.

17,500 டோஸ் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து புதுச்சேரிக்கு புதன்கிழமை வந்தது. இந்த நிலையில், புதுச்சேரியில் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை, கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, ராஜீவ் காந்தி அரசு மகளிா் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையம், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, மாஹே அரசு பொது மருத்துவமனை, ஏனாம் அரசு பொது மருத்துவமனை ஆகிய 7 மையங்களில் சனிக்கிழமை காலை 9 மணிக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும்.

ராஜீவ் காந்தி அரசு மகளிா் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வா் வே.நாராயணசாமி தொடக்கிவைக்கிறாா். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாள்களில் மட்டுமே தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.