விலையில்லா சலவைப் பெட்டிகளை வாங்க அழைப்பு
நிகழாண்டில் 60 பேருக்கு விலையில்லா சலவைப் பெட்டிகள் வழங்கப்படவுள்ளதால், இவற்றைப் பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் துறையின் சாா்பில், நிகழாண்டில் 60 பேருக்கு விலையில்லா சலவைப் பெட்டிகள் வழங்கப்படவுள்ளதால், இவற்றைப் பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளாா்.
விண்ணப்பிப்போரின் ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஆட்சியரக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.